இந்தியாவின் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், டார்வின் உள்ளிட்ட நகரங்களுக்கு இருமார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம்.
சிங்கப்பூருக்கு வந்திருக்கும் புதிய நோய்த்தொற்று, 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, சென்னை உள்ளிட்ட ஒவ்வொரு நகரங்களில் இருந்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் வழங்கி வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுவதால், தொழிலதிபர்கள் அதிகளவில் இந்த விமான சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய விமான சேவையால் இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வரும் தொழில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் சிங்கப்பூர் நடிகர் – ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.