சிங்கப்பூருக்கு வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

சிங்கப்பூருக்கு வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
Photo: Minister Jaishankar Twitter Page

 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான தனது ஆறு நாள் அரசுமுறைப் பயணத்தை இன்று (அக்.15) தொடங்கியிருக்கிறார். முதலில், வியட்நாம் நாட்டிற்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

டிப்பர் லாரியில் இருந்து சரிந்த உலோகக் குழாய்கள்.. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்

வியட்நாம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் உயர்மட்ட கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நாடான வியட்நாமுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 18- ஆம் தேதி வரை வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் அக்டோபர் 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

திடீரென வரிசையாக வெடித்து பெயர்ந்த டைல்ஸ்.. HDB வீட்டில் அதிர்ச்சி – வீடியோ

சிங்கப்பூர் பயணத்தின் போது, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது.