இந்தியச் சமூக மக்களுக்காக சிண்டாவின் வேலைவாய்ப்பு..!

Indian community SINDA Job offers
(PHOTO: Jamunah)

இந்தியச் சமூக மக்களுக்காக நேற்று சிண்டாவின் வேலைவாய்ப்பு சந்தை நடைபெற்றது என்று “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

இந்த கொரோனா தொற்று சூழலில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் குறிப்பாக அதிகமானோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

இதையும் படிங்க : காணாமல் போன செல்லப் பறவை.. வெகுமதி தருவதாக பதிவு…11 நாட்களுக்குப் பிறகு உரிமையாளருடன் மீண்டும் இணைந்தது..!

சிங்கப்பூரில் அந்த சிண்டாவின் வேலைவாய்ப்பு சந்தை மூலம், வேலைகளை இழந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பலவிதமான வேலை வாய்ப்புகளை வழங்கியதாக அது குறிப்பிட்டுள்ளது.

அதே போல வேலை தேடும் நபர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ‘Skills Ambassadors’ எனும் திறன் பகிர்வு தூதர்களும் அங்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று அக்டோபர் 10ஆம் தேதி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு சந்தை நடைபெற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்தையில், லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம் மற்றும் சிங்கப்பூர் இந்திய உணவகச் சங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் உட்பட பல அமைப்புகள் நேர்முகத் தேர்வுகளை நடத்தியதாகவும் செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் சிராங்கூன் ரோட்டில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் – 5 பேர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…