பைக் மோதிய விபத்தில் இந்திய ஊழியர், ஓட்டுநர் மரணம்: ஊழியரின் குடும்பத்துக்கு உதவி வருவதாக LTA தகவல்

பைக் மோதிய விபத்தில் இந்திய ஊழியர், ஓட்டுநர் மரணம்: ஊழியரின் குடும்பத்துக்கு உதவி வருவதாக LTA தகவல்
AFP

சிங்கப்பூரில் இந்திய ஊழியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

45 வயதுமிக்க ஊழியர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

E Pass வேலை அனுமதி விண்ணப்பங்கள்… 43 சதவீத ஊழியர்களுக்கு 3 முறை அனுமதி

ஊழியர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருமே சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் பயனியர் ரோடு நார்த்தில் இருந்து வெளியேறும் துவாஸ் நோக்கி செல்லும் வழியில் உள்ள பான்-தீவு விரைவுச்சாலையில் நடந்தது.

லே சூன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தில் அவர் பணிபுரிந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை பணிகளுக்காக போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளராக அவர் வேலை செய்து கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு விபத்தில் 41 வயதான பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் செப். 16 அன்று காலை 10.45 மணியளவில் Cavenagh சாலையில் North-South Corridor வேலைத்தளத்தில் நடந்தது.

உயிரிழந்த ஊழியர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் உதவி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

மேலும் MOM இன் விசாரணைகளுக்கும் அது உதவுகிறது.

இந்திய ஊழியர் உட்பட இரு வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் விபத்தில் சிக்கி மரணம்

இந்திய ஊழியர் உட்பட இரு வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் விபத்தில் சிக்கி மரணம்