சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 4,720 பேர் இந்தியா திரும்பினர்!

Indian Flight travelers Singapore
(PHOTO: Reuters)

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் நேற்று (டிசம்பர் 27) மட்டும் 4,720 பேர் இந்தியா வந்துள்ளனர்.

வந்தே பாரத் என்னும் சிறப்பு திட்டம் மற்றும் Air bubble திட்டத்தின் கீழ், இந்திய அரசு தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது.

சிங்கப்பூரில் 2021 முதல் புகைபிடிப்பதற்கான வயது வரம்பு அதிகரிப்பு!

இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

(PHOTO: Hardeep Singh Puri/Twitter)

நேற்றைய நிலவரப்படி (டிசம்பர் 27), 148 பேர் சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

அதாவது அவர்கள் இந்தியாவின் விஜயவாடா மற்றும் ஹைதராபாத் திரும்பியுள்ளனர் என்று இந்தியா விமான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கடந்த மே 6 முதல் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஊழியர் இறந்த நிலையில் கண்டெடுப்பு – காவல்துறை விசாரணை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…