சிங்கப்பூரில் இந்திய ஊழியரை காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நேற்று மார்ச் 25 ஆம் தேதி முதல் 59 வயதான இந்தியரை காணவில்லை என்று SPF கூறியுள்ளது.
அதாவது நேற்று இரவு 9 மணி முதல் அவரை காணவில்லை. கடைசியாக பிளாக் 46 சர்க்யூட் ரோட்டில் அவர் காணப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்கும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.