பெண்களிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்டு பிடிபட்ட இரு இந்திய நாட்டவர்கள்

ONE Pass வேலை அனுமதி
Jeremy Ong

சிங்கப்பூரில் பெண்ணிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்ட 49 வயதான இந்திய நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மெரினா பே சாண்ட்ஸின் கேசினோ விடுதிக்கு வெளியே கடந்த ஆண்டு ஜூலை 5 அன்று காலை 5 மணியளவில் நடந்தது.

நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்.. மீண்டும் வேலை தேட சிங்கப்பூர் நுழைய முயன்றதால் பிரம்படி

மெர்லா ராமகிருஷ்ண மதுசூதன் என்ற அவர், 38 வயதுமிக்க பெண்ணின் தொடையில் கை வைத்து மானபங்கம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முன்பின் தெரியாதவர் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

மானபங்கம் செய்ததாக அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

மற்றொரு சம்பவம்

டெம்பிள் ஸ்ட்ரீட்டில் உள்ள சைனாடவுன் பஜாரில் கடந்த பிப்ரவரி 9, அன்று இன்னொரு மானபங்க சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

44 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியதாக கண்ணன் கோவிந்தராஜி என்ற 33 வயதான இந்திய நாட்டவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

வெளிநாட்டவர் சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?