‘ஹைதராபாத்- சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை’- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Indigo Airlines

 

ஹைதராபாத்- சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) நிறுவனம் தொடங்கவுள்ளதாக ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரில் 14 வயது சிறுமியை 4 நாட்களாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

அக்டோபர் 29- ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கும் நேரடி விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், தினசரி நான்குக்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு, பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://www.goindigo.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.