COVID-19 தொற்றிலுருந்து குணமடைந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் சொகுசுக் கப்பல் லைனர் சூப்பர்ஸ்டார் ஜெமினியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த கப்பலில் கடந்த ஏப்ரல் 29 அன்று முதல் தொகுதியாக ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மேலும் 900க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!
தற்போது, 1,500 வெளிநாட்டு ஊழியர்கள் கப்பலில் தங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல சூப்பர்ஸ்டார் அக்வாரியஸ் சொகுசுக் கப்பலில், மேலும் 1,500 ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் ஊழியர்களுக்குச் சிகிச்சை அளிக்க மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தில் ஒரு சிறப்பு அறை நிறுவப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் Raffles மருத்துவக் குழுமத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுங்கே கடுட் வேவில் உள்ள கிடங்கில் தீ விபத்து..!