சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துக்கொண்டார்.
ஒவ்வொரு முறையும் அதிக பெண் MPக்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய திரு லீ, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சார்பாகவும் அவர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.
அவர் பகிர்ந்து அந்த புகைப்படம் நாடாளுமன்ற குழு அமர்வுகளுக்கு இடையே எடுக்கப்பட்டாகவும் தன்னுடைய Facebook பக்கத்தில் கூறினார்.
Employment Pass அனுமதி புள்ளி முறையில் ஏதேனும் தந்திரம் செய்ய முயற்சித்தால் அதிக கடும் நடவடிக்கை…!
மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண் MPகளை தற்போது நாடாளுமன்றம் கொண்டுள்ளது என பெருமையுடன் கூறினார் திரு லீ.
அதாவது, 26 MPக்கள், 3 NMPக்கள் மற்றும் 1 NCMP ஆகிய பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது கொள்கைகளை அமைப்பதில் அதிக சமநிலை மற்றும் மாறுபட்ட கண்ணோட்டங்களை நிச்சயமாக சேர்த்துள்ளது என பெருமிதம் கொண்டார்.
” மக்களுக்கு சேவையாற்ற, அதிகமான அர்ப்பணிப்பும், திறமைகளையும் கொண்ட பெண்களை நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம்.”
“பெண்களுக்கான சமத்துவம் வாய்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலாகும்.”
கூடுதலாக, பெண்கள் மேலும் முன்னேற நம் அனைவரின் பங்கு குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் அனைத்து பொது இடங்களிலும் புகைப்பிடிக்க தடை – மீறினால் கடும் அபராதம்!