சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது ‘ItsRainingRaincoats’. தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன், வெளிநாட்டு ஊழியர்களுக்கு பீட்சா, சமோசா உள்ளிட்ட உணவுகளையும், சுற்றுலாக்களுக்கும் அழைத்து செல்கிறது இந்த அமைப்பு.
அத்துடன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழாக்காலங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கி இன்பதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது ‘ItsRainingRaincoats’. அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குடைகளையும், சூடான சமோசாக்களையும் ‘ItsRainingRaincoats’ அமைப்பு வழங்கியது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு குடைகள், சூடான சமோசாக்களை வழங்கிய ‘ItsRainingRaincoats’!
அதனை வெளிநாட்டு ஊழியர்கள் இன்பமுகத்துடன் பெற்றுக் கொண்டு, ‘ItsRainingRaincoats’ அமைப்புக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டனர். சிங்கப்பூருக்காக நீங்கள் செய்யும் அனைத்திற்கும் மட்டுமல்ல; நீங்கள் நண்பர்களாகக் கிடைத்ததற்கு நாங்கள் தான் நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்று ‘ItsRainingRaincoats’ அமைப்புத் தெரிவித்துள்ளது.