அழகு நிலையம் அமைப்பதாக சொல்லி இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த பெண், அங்கு தவறான வேலைகளை செய்துவந்ததை அடுத்து பிடிபட்டார்.
அங்கு பெண் ஊழியர்களை வைத்து பாலியல் சேவைகளை வழங்கி அவர் பணம் சம்பாதித்து வந்தது போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
சிங்கப்பூரில் 36 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு
இந்நிலையில், 45 வயதான சுகினா அப்துல் லத்தீப் என்ற அவர் பெண்கள் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து, செவ்வாயன்று (அக். 24) அவருக்கு நான்கு மாதங்கள் மற்றும் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனையும், S$6,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், இதே போன்ற மற்ற எட்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
2018 ஆம் ஆண்டில், அழகு சேவைகளை வழங்கும் கடை என்று அப்பர் செராங்கூன் சாலையில் டெக் சை டெரஸ் இடத்தை சுகினா வாடகைக்கு எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
அந்த கடைக்காக அவர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை வேலைக்கு எடுத்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து ஒர்க் பெர்மிட்டில் வந்த பெண்களுக்கும் இவர் தான் பொறுப்பு என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்திற்கு பாலியல் சேவைகளை சேவைகளை வழங்கியது போலீஸ் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
சுகினாவிற்கும் அந்த பெண் ஊழியர்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் என்னவென்றால்; பெண் ஊழியர்கள் சம்பாதித்த அனைத்து பணத்தையும் அவர்கள் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் அந்த இடத்தில் உள்ள அறைகளைப் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு சேவைக்கும் சுகினாவுக்கு S$50 கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்