சிங்கப்பூர் ஜலான் சுல்தான் பகுதியில் சண்டை – 7 பேர் கைது

Jalan Sultan fight
(Source: WALB)

சிங்கப்பூர் ஜலான் சுல்தான் பகுதியில் சமீபத்தில் பெரிய சண்டை ஒன்று அரங்கேறியுள்ளது.

கடும் வாக்குவாதத்துடன் காணப்படும் அதன் தொடர்பான நான்கு காணொளிகள் Complaint Singapore பேஸ்புக் பக்கத்தில், Tim Tim என்ற பயனரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையில் தோன்றிய நீர்ச்சுழற்சி!

ஒரு காணொளியில், பெண்கள் குழு ஒன்று சண்டையிட்டு, ஒருவரையொருவர் தள்ளிக்கொள்வதையும் காணலாம்.

இந்த மோதலில் இரண்டு எதிரெதிர் குழுக்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

கடந்த டிசம்பர் 6ம் தேதி இரவு 11:58 மணியளவில் 200 ஜலான் சுல்தானில் நடந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

(Photo: Tim Tim / FB)

இந்த சம்பவத்தில் 18 முதல் 32 வயதுக்குட்பட்ட ஏழு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 22 மற்றும் 32 வயதுடைய 7 பேரில் இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர், அப்போது அவர்கள் சுயநினைவுடன் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் பணியாற்றிவந்த தமிழக ஊழியர் மரணம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…