சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ஆடவர் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி காட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் முத்து வேம்பையன் (வயது 32) என்ற அந்த ஆடவர் இதில் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளன.
சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடையவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கு தான்!
அவர் சிங்கப்பூரில் உள்ள அவரது அறையில் கடந்த டிச.4ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள், முத்துவேம்பையன் குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து அவரது குடும்பம் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளதாகவும், உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முத்துவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவருக்கு திருமணம் ஆகி 4 மாத ஆண் குழந்தை உள்ளது. மன உளைச்சல், குழந்தையை பார்க்க முடியாத ஆதங்கமும் அவருக்கு இருந்ததாகவும், இதைப்பற்றி அவரின் நண்பர்களிடம் புலம்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப வறுமை, பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் அந்த ஆடவர் இறந்த சம்பவம் கேட்போரை கடும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
Source: Daily Thanthi
சிங்கப்பூரில், பறவைக்கு உணவளித்த ஆடவர் – NParks விசாரணை!