ஜூன் 14- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி வழிபாடு!

Photo: Sri Mariamman Temple

சிங்கப்பூரில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. இந்த கோயிலில் விஷேச நாட்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றது.

உலகிலேயே வளர்ப்பு கோழி இறைச்சிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது தெரியுமா? – ஆசியாவிலேயே மிகப்பெரிய கோழி வளர்ப்பு ஆய்வகம்

அதன் தொடர்ச்சியாக, வரும் ஜூன் 14- ஆம் தேதி அன்று மாலை 08.30 மணி முதல் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பால்குடம் நிகழ்ச்சி நடைபெறும். பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். என்ற கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே பக்தர்கள் கோயில் வளாகத்தைச் சுற்றி வர முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த உத்சவம்!

கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பௌர்ணமி வழிபாட்டைப் பார்வையிடலாம். மேல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணை கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.