முதல் நாள் காதலனை சந்தித்து நிச்சயம் குறித்து பேசிய இளம்பெண்.. அடுத்த நாள் விபத்தில் சிக்கி மரணம்

jurong-motorcycle-accident-woman
SG Road Vigilante Facebook

ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயது பெண்ணுக்கு வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

அக்.1, ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில், அந்த பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

“ஊழியர்களுக்கு முறையான காலணிகள் இல்லை, விழுந்து காயம் ஏற்படும் அபாயம் அதிகம்” – சிக்கிய 435 நிறுவனங்கள்

நூர் அஃபியா ஹிஷாம் என்ற அந்த பெண் கடந்த சனிக்கிழமை மாலை தனது வருங்கால கணவர் முகமத் ஃபௌசன் முஹத் மஸ்ரியை (25) சந்தித்துள்ளார்.

“விபத்து நடந்த முந்தைய இரவு நான் நூர் அஃபியாவை சந்தித்தேன். மேலும் சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நிச்சயதார்த்தம் பற்றி நாங்கள் கலந்து பேசினோம்” என்று முகமத் ஃபௌசன் விபத்து நடந்த ஒரு நாள் கழித்து அளித்த பெட்டியில் கூறினார்.

அஃபியாவின் பெற்றோர்களுக்கு ஆறு குழந்தைகள், இதில் சோகமான செய்தி என்னெவென்றால் இவர் தான் ஒரே ஒரு பெண் குழந்தை.

மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி அவர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

விபத்து நடந்த மாலை 4 மணியளவில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட் வரலாற்று வெற்றி… S$13 மில்லியனை தட்டி தூக்கியவர் இந்தியரா? – ஊகிக்கும் நெட்டிசன்கள்