ஜூரோங் ஈஸ்ட் கார் பார்க்கிங்கில் நடந்த விபத்தைத் தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்டோர் உதவிக்கு விரைந்து வந்தனர்.
இதனை அடுத்து வேனில் இருந்த மூன்று பேர் மீட்கப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
இலவசம்.. இலவசம்.. திரு தர்மனின் வெற்றியை கொண்டாடும் கடை!
செப். 1-ம் தேதி இரவு 10:30 மணியளவில் பிளாக் 245 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 24 இல் இரண்டு வேன்கள் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நடைபாதையில் தடுமாறி ஏறிய வேன், சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது மோதியது.
இதனை அடுத்து 20க்கும் மேற்பட்டோர் முன்வந்து வேனில் சிக்கிய மூன்று பேரை மீட்க உதவியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இதில் ஒருவருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
22 வயதான பெண் வேன் ஓட்டுனர் விசாரணைக்கு உதவி வருகிறார்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 7040, 1388 ஆகிய 4D டிரா எண்கள்