பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் – 24 மணிநேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்!

foreign workers wife target teacher arrested
Pixabay

ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21ல் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 34 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மே 17 அன்று இரவு சுமார் 10 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தோ பாயாவில் இறந்து கிடந்த ஆடவர் – யார் என்று போலீஸ் விசாரணை

தரை விசாரணைகள் மற்றும் கேமரா உதவியுடன், கிளெமென்டி போலீஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து 24 மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.

இந்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் அல்லது அத்தகைய தண்டனைகள் கலவையாகவும் விதிக்கப்படலாம்.

இது போன்ற குற்றவாளிகளுக்கு சகிப்புத் தன்மை காட்டப்படாது என்றும், குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகக் தண்டிக்கப்படுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூருக்கு இந்த பிளானை போட்டுக்கொடுங்க… $500,000 பிரம்மாண்ட பரிசை தட்டிச் செல்லுங்க!