ஜூரோங் கேட்வே சாலையில் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம்

Jurong Gateway Road accident motorcyclist dies
Facebook/SG Road Vigilante

ஜூரோங் கேட்வே சாலையில் நேற்று (அக்.1) நடந்த விபத்தில் 23 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

நேற்று காலை 10.05 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. $2 கொடுத்து சட்டவிரோத லாரி சேவையில் பயணிக்கும் நிலை

அதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற பெண், சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் சோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரிவித்தனர்.

அது தொடர்பான வீடியோ ஒன்று டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

மாஸ் காட்டும் “தேக்கா நிலையம்”… பல்வேறு சிறப்புகளுடன் மீண்டும் திறப்பு