ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் நேற்று (டிச.7) இரவு ஏற்பட்ட விபத்தில் 69 வயதுடைய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
பிளாக் 457 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 41க்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் PMA சாதனம் மோதி இந்த சம்பவம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மயக்க நிலையில் இருந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவர் உயிரிழந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த சாலை விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு 8:35 மணிக்குள் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மேலும் 27 வயதுமிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரும் சுயநினைவுடன் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை ஷின் மின்னிடம் தெரிவித்தது.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
கட்டுமான ஊழியரை படுத்த படுக்கையாக போட்ட கோர சம்பவம் – நிறுவனத்தின் இயக்குனர் மீது பாய்ந்த சட்டம்