பெண்ணை மானபங்கப்படுத்தினால் பிரம்படியா! – கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதுதான் தண்டனை!

Man arrested kallang road

காலாங் பாருவில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில் 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணை மானபங்கப்படுத்தியதாக நவம்பர் 22 அன்று காலை 10.30 மணியளவில் புகாரளிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணை நவம்பர் 21-ஆம் தேதி மானபங்கப்படுத்தியது தெரிய வந்துள்ளது.புகாரளிக்கப்பட்ட ஏழு மணி நேரத்திற்குள் அந்த நபரின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

தீவிர விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகிய காட்சிகள் மூலம் மத்தியக் காவல்துறைப் பிரிவு விரைவில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.அந்த நபர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.