Buangkokகில் கத்தியை வைத்துக்கொண்டு சண்டையின் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைகளிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
நேற்று புதன்கிழமை (டிசம்பர் 22) அதிகாலை 5.30 மணியளவில், Buangkok ஸ்கொயர் மாலுக்கு அருகில் உள்ள புவாங்காக் கிரசன்ட் என்ற இடத்தில் 24 வயதுமிக்க ஆடவர் ஒருவர் அதே வயதுடைய ஒருவரைத் தாக்கியதாக போலீஸாருக்கு புகார் கிடைத்தது.
இதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர், இந்த சண்டையில் பாதிக்கப்பட்டவரை கத்தியால் தாக்கியுள்ளார் என்றும் அது கூறியுள்ளது.
இதனை அடுத்து, கைகளிலும் முகத்திலும் பல காயங்களுடன் இருந்த பாதிக்கப்பட்ட ஆடவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.
அன்றைய தினம், சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை, காவல்துறை கேமரா உதவியுடன் அடையாளம் காண போலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர், 21 மற்றும் 27 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், 27 வயதான பெண் விசாரணைகளுக்கு உதவுகிறார்.
இதில் தாக்குதல் நடத்திய நபரிடம் இருந்து கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்.