சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியால் கையும் களவுமாக பிடிபட்டார்.
அந்த பணிப்பெண் வெளிநாட்டுத் ஊழியர் ஒருவருடன் இரவில் ஒன்றாகக் இருந்ததை அடுத்து அவர் முதலாளியிடம் பிடிபட்டுள்ளார்.
தங்கள் வீட்டில் அந்நிய ஆடவர் இருப்பதைக் கண்டறிந்த முதலாளி, உடனடியாக போலீஸை அழைத்ததாகவும், சில மணிநேரங்கள் கழித்து வீட்டுப் பணிப்பெண்ணை ஏஜென்சியிடம் திரும்பி அனுப்பியதாகவும் கூறினார்.
சொத்தின் உரிமையாளர்களின் சம்மதம் அல்லது அறிவு இல்லாமல் அறைக்குள் சென்றதாக அவர்கள் போலீசில் ஒப்புக்கொண்டதாக முதலாளி வோங் மதர்ஷிப்பிடம் கூறினார்.
இருவரும் ஒன்றாகக் இருப்பது இது முதல் முறை அல்ல என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்கள் அறையில் கருத்தடை மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
வோங் குடும்பம் புக்கிட் திமாவுக்கு அருகில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். வோங்கிற்கும் அவரது கணவருக்கும் இரண்டு, நான்கு மற்றும் ஆறு வயதுடைய மூன்று மகள்கள் உள்ளனர்.
தாயகம் திரும்ப மலேசியர்கள் ஆர்வம்: விற்றுத் தீர்ந்த ஜனவரி மாத இறுதி 10 நாள் பேருந்து டிக்கெட்டுகள்!