கல்லாங்-பாயா லெபார் விரைவுச்சாலையில் கார் மற்றும் லாரி மோதிய விபத்தில் சிக்கிய மொத்தம் 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று புதன்கிழமை (ஜூலை 19) காலை 7.50 மணியளவில் தெம்பனீஸ் விரைவுச்சாலை நோக்கி செல்லும் கல்லாங்-பாயா லெபார் விரைவுச்சாலையில் நடந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 11 பேரில், 10 பயணிகள் லாரியில் பயணம் செய்தவர்கள். அவர்களுக்கு வயது 22 முதல் 42 வரை இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், காரில் பயணம் செய்த 23 வயதுடைய பெண் ஒருவரும் இதில் அடங்குவார் என்றும் போலீசார் டுடேவிடம் தெரிவித்தனர்.
இதில் சிக்கிய 5 பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும், மேலும் 5 பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கும், ஒருவர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக SCDF கூறியது.
அனைவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்