சர்கியூட் பிரேக்கர் அதிரடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஆட்குறைப்பு அதிகமாகலாம் – மனிதவள அமைச்சர்..!

lay off workers
(Photo: CNBC)

COVID -19 சர்கியூட் பிரேக்கர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஆட்குறைப்பு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இன்னும் அடிமட்டத்தை தொடவில்லை என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

இந்த கொடிய சூழ்நிலையின் காரணமாக அரசாங்கம் அதிகமான வேலைப்பயிற்சி திட்டங்களை குறிப்பாக பணியிடைக்கால வேலை தேடுவோருக்காக அறிமுகம் செய்யும் என்றும் ஒரு நிரந்தர வேலை கிடைப்பதற்குமுன் இந்த வேலை பயிற்சி திட்டம் மூலம் அவர்கள் அனுபவம் பெறலாம் என்று டியோ கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 34,000ஐ தாண்டியது..!

இது போன்ற ஒரு கொள்ளை நோய் நம்மை இந்த அளவுக்கு தாக்கும் என்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இருக்கும் வேலை வாய்ப்புகளைவிட வேலை தேடுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாம் அனைத்து வகையிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி சிறிதும் துவண்டு விடாமல் அவற்றை உடனடியாக செயல் படுத்த வேண்டும், இந்த வாய்ப்புகள் சிங்கப்பூரர்களை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டியோ தெரிவித்துள்ளார்.

சர்கியூட் பிரேக்கர் காலம் ஜூன் 1ம் தேதி முடிவடைந்தவுடன் வேலை ஆதரவு திட்டத்தின் மூலம் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பள மானியத் தொகை முடிந்தவுடன் நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொள்ள வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வலிமைக்கான வரவுச்செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது SG ஒற்றுமை வேலைகள் மற்றும் திறன்கள் தொகுப்பு குறித்தது துணை பிரதமர் அறிவித்திருந்தார். அதன்படி இவ்வாண்டில் இளம் சிங்கப்பூரர்களுக்காக 21,000 வேலைப்பயிற்சி இடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

வேலையில்லாமல் இருக்கும் பணிஇடைக்கால வேலை தேடுவோருக்கு மேலும் 4,000 வேலைப்பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1ம் தேதியிலிருந்து mycareersfuture.sg என்ற இணையத்தளம் மூலமாக வேலைப்பயிற்சி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் 11,000 வேலைப்பயிற்சி வாய்ப்புகள் வழங்கவுள்ளதாக டியோ கூறியுள்ளார்.

புதிய பட்டதாரிகளைக் காட்டிலும் பணிஇடைக்கால ஊழியர்களுக்கு வேலைப்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது சவாலாக இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் டியோ, அவர்களின் திறமைக்கேற்றபடி நிறுவனங்கள் திட்டங்களை வகுக்க வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பணியிடைக்கால பயிற்சித் திட்டங்கள் பெரிய அளவில் இடம்பெறும் அவை நிறுவனங்களுக்கும், வேலை தேடுவோருக்கு வெற்றி தருவதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே சிரமப்படும் நிலையில் பயிற்ச்சிக்கால உதவித்தொகையை வழங்க சிரமப்படும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இளம் சிங்கப்பூரர்களுக்கு வேலைப்பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்குப் பயிற்சிக்கான படித்தொகையில் 80 விழுக்காட்டை சிங்கப்பூர் ஊழியரணி ஏற்றுக்கொள்ளும், எஞ்சிய தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SG ஒற்றுமை வேலை வாய்ப்புத் திட்டம் மூலமாக பொது தனியார் துறைகள் இணைந்து 40,000த்திற்கு அதிகமான வேலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று டியோ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: COVID-19 சர்க்யூட் பிரேக்கருக்குப் பிறகு வேலையிடங்களில் ஒன்றுகூடவேண்டாம்: மனிதவள அமைச்சகம்…