சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு. லீ குவான் இயூவின் 100- வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மரியாதைச் செலுத்தினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “மாமனிதர் திரு.லீ குவான் இயூவின் 100- வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். அவரது தொலைநோக்கு தலைமை சிங்கப்பூரின் மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தது.
My tributes to the great Lee Kuan Yew on the special occasion of his 100th birth anniversary. His visionary leadership played a key role in Singapore's transformation. His foresight and relentless pursuit of excellence are a testament to his personal greatness. His work continues…
— Narendra Modi (@narendramodi) September 16, 2023
அவரது தொலைநோக்கு பார்வையும், சிறப்பு விளங்குவதற்கான இடைவிடாத நாட்டமும், அவரது தனிப்பட்ட மகத்துவத்திற்குச் சான்றாகும். அவரது பணி உலகம் முழுவதும் உள்ள தலைவர்களை ஊக்குவிக்கிறது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
“இந்த வேலையை செய்யுங்க உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்” – ஏமாந்துபோன பல ஆயிரம் பேர்
சிங்கப்பூரின் தேசத்தந்தை என்றழைக்கப்படும் திரு.லீ குவான் இயூ, தனது வாழ்நாள் முழுவதும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகவும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.