லிட்டில் இந்தியாவில் ரோவெல் ரோட்டில் (Rowell Road) மற்றொரு நபரை முதுகில் வெட்டியதாக 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து, கடந்த புதன்கிழமை (அக் .21) தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நான்கு பெண்களின் சண்டை….மூன்று பேர் கைது..!!
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த இளைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவருடன் அந்த நபர் தகராறு செய்ததாகக் கூறப்படுவதாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
அந்த சந்தேக நபர் மீது இன்று சனிக்கிழமை, தானாக முன்வந்து ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம், ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், பிரம்படி விதிக்கப்படலாம் அல்லது இந்த தண்டனைகளில் ஏதேனும் இரண்டை பெறலாம்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு 4 வாரச் சிறை..!