லிட்டில் இந்தியாவில் உள்ள கம்போங் கபோர் சாலையில் மரம் விழுந்து பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் இன்று ஜன.07 நண்பகல் வேளையில் நடந்தது, சுமார் 6 வாகனங்கள் மீது மரம் விழுந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதில் கார், லாரி மற்றும் 4 மோட்டார் சைக்கிளும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
விழுந்த மரம், பிற்பகல் 2 மணி வாக்கில் அப்புறப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட வாகனங்களும் இழுத்துச்செல்லப்பட்டன.
இந்த சம்பவத்தில் அங்கிருந்த விளக்கு மற்றும் அறிவிப்பு பலகை சேதமடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
நல்வாய்ப்பாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த ஐவர் – குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு