‘”WHATSSAPP ME NOW” என்ற குறிப்பு… சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

loanshark bedok central arrest
Singapore Police Force website

கடனாளிகளை தொந்தரவு செய்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு வயது 17 மற்றும் 18 வயது எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

சர்க்யூட் சாலை அருகே இறந்து கிடந்த ஆடவர்: “சொந்தம் யாரும் இல்லை” – போலீஸ் விசாரணை

பெடோக் சென்ட்ரலில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியது.

அங்குள்ள வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஷூ ரேக் கவிழ்த்தப்பட்டு, அதில் எச்சரிக்கை குறிப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

அந்தக் குறிப்பில் ‘”WHATSSAPP ME NOW” என்று எழுதப்பட்டு இருந்தது, அதனுடன் இரண்டு சிங்கப்பூர் தொடர்பு எண்களும் அடங்கியிருந்தன.

பின்னர், விசாரணையின் ஒரு பகுதியாக அந்த குறிப்பு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பெடோக் போலீஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் போலீஸ் கேமரா உதவியுடன் அவர்களை அடையாளங்களை போலீசார் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் கடந்த நவம்பர் 16, 2023 அன்று கைது செய்யப்பட்டனர்.

இன்று (நவ.20) அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

மது அருந்துவோருக்கு வந்தது புதிய திருத்த சட்டம்: 2024 ஜனவரி 2 முதல்… மீறினால் நடவடிக்கை