சிலேத்தர் அதிவிரைவுச் சாலையில் (SLE) லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 24 முதல் 33 வயதுக்குட்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்து அன்று காலை 8:20 மணியளவில் புக்கிட் திமா அதிவிரைவுச் சாலை (BKE) நோக்கி செல்லும் சிலேத்தர் அதிவிரைவுச் சாலையில் நடந்தது.
இது தொடர்பான காணொளிகள் SGRV Admin என்னும் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட ஐந்து ஓட்டுநர்களும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
“வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது” – மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம்
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
பேருந்து, லாரி உட்பட 4 வாகனங்கள் மோதி கடும் விபத்து: ஒருவர் மரணம் – லாரி ஓட்டுநர் கைது