கிளமென்டி அவென்யூ 2வில் கடந்த திங்கள்கிழமை மாலை (டிசம்பர் 20) போக்குவரத்துக்கு விதிகளுக்கு எதிராகச் சென்ற லாரி கேமராவில் பிடிபட்டது.
இந்த சம்பவத்தின் காட்சிகள் SG Road Vigilanteடின் யூடியூப் சேனலில் பகிரப்பட்டது.
அந்த வீடியோவில், கேமரா உள்ள வாகனமும் லாரியும் நேருக்கு நேர் எதிர்கொள்கின்றன.
லாரிக்கு வழிவிடுவதற்காக அந்த கேமரா வாகன ஓட்டுனர் பின்னோக்கிச் சென்றதற்காக நெட்டிசன்கள் அவரை பாராட்டினர்.
தவறு செய்த லாரி ஓட்டுனர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றவர்கள் வலியுறுத்தினர்.
போக்குவரத்து விதிகளை மீறும்போது விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க முடியும்.