லாரி, கனரக வாகனம் மோதி விபத்து: கடும் சேதமடைந்த லாரி – ஒருவர் மருத்துவமனையில்

லாரி கனரக வாகனம் மோதி விபத்து: கடும் சேதமடைந்த லாரி - ஒருவர் மருத்துவமனையில்
Photo: SCDF/FB

சிலேத்தர் விரைவுச்சாலையில் (SLE) லாரி, கனரக வாகனம் ஆகியவை மோதி விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை (SCDF) கூறியுள்ளது.

நேற்று 2 ஆகஸ்ட் அன்று பிற்பகல் 3:20 மணியளவில், லென்டர் அவென்யூ வெளியேறும் முன், சிலேத்தர் விரைவுச்சாலையில் லாரி மற்றும் கனரக வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து SCDF படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக அது சொன்னது.

கப்பலில் இருந்து விழுந்த இந்திய பெண் உயிரிழப்பு – CCTV காட்சிகளை வைத்து உறுதி

லாரியின் முன்பகுதி உள்நோக்கி கடுமையாக நசுங்கியதால், இருக்கையில் ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். அவரின் கால்கள் டாஷ்போர்டின் கீழ் சிக்கிக்கொண்டதாக அது கூறியது.

DART அதிகாரிகள் உட்பட மீட்பு குழுவினர் தீவீரமாக மீட்புப் பணியை மேற்கொண்டு அவரை அதிலிருந்து மீட்டனர்.

காயமடைந்த ஓட்டுநர், பின்னர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் புதிய நடைமுறை – 2024 முதல் அமல்