துறவி கொடுத்த லாட்டரிக்கான அதிஷ்ட எண் பரிசை வெல்லவில்லை என்பதால் ஆத்திரமடைந்த ஆடவர் ஒருவர் துறவியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் காணொளியாக எடுக்கப்பட்டு பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
அழுகிய மற்றும் தொங்கி நிலையில் கண்டெடுக்கப்பட்ட 36 வயதுமிக்க ஆடவர்
பதிவில், அந்த சம்பவம் தாய்லாந்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொளியில் தலைப்பின்படி, அந்த ஆடவர் ஒவ்வொரு வாரமும் துறவி அளித்த எண்களைக் கொண்டு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், தான் கொடுத்த எண்கள் நிச்சயம் லாட்டரியில் பரிசை அள்ளும் என்று துறவி அந்த நபரை நம்பவைத்ததாகவும் கூறப்படுகிறது.
துறவியை நம்பிய அந்த ஆடவர், லாட்டரி சீட்டுகளை வாங்க கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை, கடன் தான் நிறைய சேர்ந்ததாக கூறினார்.
இதனால் தான் அவர் துறவியைத் தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
நமக்கான அதிஷ்டம் நம்மை வந்து சேரும், யாரையும் நம்பி ஏமாறாமல் இருப்பது சால சிறந்தது.