மாதச் சம்பளம் S$1,400 – பகுதி நேர சம்பளம் S$9… இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 1,900 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு படிப்படியாக சம்பள உயர்வை வழங்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜனவரி 9ஆம் தேதி நிலவரப்படி, டிசம்பர் 2022 இல் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டதில் இருந்து சுமார் 1,900 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான அங்கீகார குறியீட்டை பெற்றுள்ளனர்.

சுமார் 76,000 நிறுவனங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன.

Cross Island Line ரயில் பாதையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் இனிதே தொடக்கம்

தற்போது முழுநேர ஊழியர்களுக்கு மொத்த மாதச் சம்பளமாக S$1,400 மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு S$9 மொத்த மணிநேர சம்பளம் பெறுபவர்கள் இதற்கான அடிப்படை குறியீட்டு தகுதி பெறுவர்.

இதனால் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தகுதி?

நிறுவனங்கள் இதில் தகுதி பெறுவதற்கு, ஒரு சிங்கப்பூர் ஊழியருக்கு படிப்படியாக உயரும் சம்பளம் வழங்கியிருக்க வேண்டும்.

மற்ற ஊழியர்களுக்கு S$1,400 என்ற குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கியிருக்க வேண்டும்.