லக்கி பிளாசாவில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர்: CCTV வீடியோவில் மாட்டினார் – 3 மணிநேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்

jail-molest-maid-lift man jailed

லக்கி பிளாசா ஷாப்பிங் சென்டரில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ததாகக் கூறப்படும் 36 வயது ஆடவர் மூன்று மணி நேரத்திற்குள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி காலை 9.40 மணியளவில் நடந்துள்ளது, இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.

விடாமல் அழுதுகொண்டே இருந்த குழந்தை: கனிவுடன் நடந்து கொண்ட பேருந்து ஓட்டுநர் – குவியும் பாராட்டு

அதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணைன் மற்றும் சிசிடிவி கேமரா உதவியுடன், டாங்லின் போலீஸ் பிரிவு அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

அதன் பின்னர், இந்த சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள் போலிசார் 36 வயது ஆடவரை கைது செய்தனர்.

இந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் மற்றும்/அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

சமூகத்தின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் யாராக இருந்தாலும் எந்தவிதமான சகிப்புத்தன்மையும் இல்லை என்றும், குற்றவாளிகள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை: 27 வணிக நிறுவனங்கள் மூட உத்தரவு – 341 பேருக்கு அபராதம்