ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தமிழகத்தில் திருச்சி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இருமார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது.
சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை.. 329 பேரிடம் போலீசார் விசாரணை
அந்த வகையில், மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் வாரந்தோறும், செவ்வாய்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது.
இந்த வழித்தட விமான சேவைக்கான செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த சிங்கப்பூரருக்கு 15 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில், மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் செல்ல ஆரம்பக் கட்டணமாக ரூபாய் 9,111 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.