வரும் மார்ச் 29- ஆம் தேதி முதல் மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவையைத் தொடங்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இது Non- VTL விமான சேவை ஆகும். மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 684 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானமும் இயக்கப்படுகிறது.
மதுரை, சிங்கப்பூர் இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் வரும் பயணிகள் கட்டாயம், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பயணிகளை அறிவுறுத்தியுள்ளது விமான நிறுவனம்.