வெளிநாட்டு பணிப்பெண்ணின் மோசமான செயல்.. அதிர்ச்சியில் நிலைகுலைந்த முதலாளி மகள்

இரண்டு சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் தனது இரண்டு இளம் மகள்களை மானபங்கம் செய்ததாக தந்தை கூறியதை அடுத்து அவர் பிடிபட்டார்.

சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்த கப்பலில் தீ.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

Complaint Singapore என்ற பேஸ்புக் பக்கத்தில் என்ன நடந்தது என்பதை Paul என்ற ஸ்டாம்ப் வாசகர் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், அவரின் இரு மகள்களும் பணிப்பெண்ணால் மானபங்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

பணிப்பெண் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து போலீசிடம் புகார் அளித்ததாகவும், சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர் கடந்த ஆகஸ்ட் 10 அன்று பணிப்பெண்ணை போலீசார் கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை பிடிப்பது, அழுத்துவது, உறுப்புகளை கிள்ளுவது போன்ற குற்றங்களை அவர் செய்து வந்துள்ளார்.

இதனால் குழந்தை அதிர்ச்சியில் நிலைகுலைந்ததாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

இது குறித்து புகாரளிக்கப்பட்டதாகவும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மாடு.. இணையத்தில் கொதித்து எழுந்த இணையவாசிகள்