ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் மகர விளக்கு திருவிழா!

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் மகர விளக்கு திருவிழா!
Photo: HEB

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) உள்ள ஐயப்பன் சுவாமிக்கு ஜனவரி 13- ஆம் தேதி முதல் ஜனவரி 15- ஆம் தேதி வரை மகர விளக்கு திருவிழா (Makaravilakku Festival) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்யும், வருகை தரும் வெளிநாட்டினர் இதை செய்ய வேண்டாம் – ஜன.4 அன்று வெளியான எச்சரிக்கை

இது குறித்து இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு ஜனவரி 13- ஆம் தேதி முதல் ஜனவரி 15- ஆம் தேதி வரை மகரவிளக்கு திருவிழா நடைபெறவுள்ளது.

ஜனவரி 13- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு ஐயப்பன் சுவாமிக்கு சங்கல்பமும், மாலை 06.15 மணிக்கு அபிஷேகமும், வேதபாராயணமும், ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணமும், இரவு 07.15 மணிக்கு பஜனைகளும், இரவு 08.30 மணிக்கு தீபாராதனையும், மந்திர புஷ்பமும், சதுர்வேதம், லோகவீரம், பஞ்சரத்தினமும், இரவு 09.00 மணிக்கு படிபாட்டும், இரவு 09.30 பிரசாதம் விநியோகமும் நடைபெறவுள்ளது.

ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் காலை 07.15 மணிக்கு சங்கல்பமும், ஹோமமும், காலை 07.45 மணிக்கு அபிஷேகமும், காலை 08.00 மணிக்கு பூர்ணாஹூதியும், கலசாபிஷேகமும், காலை 08.30 மணிக்கு சிறப்பு பூஜையும், அஷ்டோத்திரமும் பாராயணமும், காலை 09.00 தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும், மாலை 06.00 மணிக்கு சங்கல்பமும், மாலை 06.15 மணிக்கு அபிஷேகமும், வேதபாராயணமும், ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணமும், இரவு 07.15 பஜனைகளும், இரவு 08.30 மணிக்கு தீபாராதனையும், மந்திர புஷ்பமும், சதுர்வேதமும், லோகவீரமும், பஞ்சரத்தினமும், இரவு 09.00 மணிக்கு படிப்பாட்டும், இரவு 09.30 மணிக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த ஐவர் – குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.