திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு பானுமதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். குடும்ப வறுமை, பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீரமணி மலேசியாவுக்கு சென்றார். அங்கு உள்ள ஒரு பழைய இரும்புக்கடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிப்புரிந்து வந்தார்.
சிங்கப்பூரில் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்!
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று வீரமணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வீரமணியின் குடும்பம் மட்டுமின்றி அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியது.
வீரமணியின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு வர திருவாரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உதவிச் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.