சிங்கப்பூர் ஆற்றில் சடலமாக மிதந்த மலேசிய இளம்பெண்: மகளை கடைசியாக பார்க்க சிங்கப்பூர் வர முடியாமல் தவிக்கும் பெற்றோர்

malaysian-woman-passed-away-singapore
Instagram & Oriental Daily

சிங்கப்பூருக்கு டியூஷன் சென்டரில் பாடம் கற்பிக்க வந்த 22 வயது மலேசியப் பெண் கடந்த ஜனவரி 18-ம் தேதி பாசிர் ரிஸில் உள்ள Api Api ரிவரில் சடலமாக மிதந்தார்.

அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வரை அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது.

சிங்கப்பூரில் வேலையிடத்தில் தவறி விழுந்த ஊழியர் மரணம்!

மலேசியாவின் கெடாவைச் சேர்ந்த கூ யீ ஜூ என்ற அந்த பெண், கடந்த ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சாய் சீயில் காணாமல் போனதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தொற்றுநோய் காரணமாக அவரது பெற்றோர்கள் மகளைப் பார்க்க சிங்கப்பூருக்கு வர முடியவில்லை என்று மலேசிய செய்தி நிறுவனமான Oriental Daily தெரிவித்துள்ளது.

அந்த பெண்ணின் உடல் சிங்கப்பூரில் தகனம் செய்யப்பட்டு, அதன் பின்னர் அவரது சொந்த ஊரில் உள்ள கல்லறைக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

உயிரிழந்த அந்த பெண்ணுக்கு 59 வயதான தந்தை மற்றும் 50 வயதான தாய் மற்றும் ஒரு மூத்த சகோதரி உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இறந்த பெண் சிங்கப்பூரில் உள்ள அத்தையுடன் தோ பாயோவில் வசித்து வந்தார். நாளை ஜன., 21 ஆம் தேதி அவரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

கழுத்தில் கேபிளுடன் ஆபத்தான நிலையில் உடும்பு…”உதவுவது நம் பொறுப்பு” – சிங்கப்பூர் வைரல்