பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் உள்ள மசாஜ் பார்லரில் பெண்ணை மானபங்கம் செய்ததாக 60 வயது ஆடவர் மீது இன்று திங்கள்கிழமை (ஜனவரி 30) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.26 மணியளவில் 1 பார்க் சாலையில் நடந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
ஏஜென்சி கூறிய பொய்… முதலாளிக்கும், ஊழியருக்கு மொழியால் ஏற்பட்ட சண்டை – போலீஸ் எடுத்த முடிவு
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் மூலம், மத்திய போலீஸ் பிரிவு அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்தனர்.
மானபங்கம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் மற்றும்/அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.