பாலத்தின் கீழ் தவறான செயலை செய்த வெளிநாட்டவர்.. S$2,500 அபாரதம் விதிப்பு

man-2500-fine-obscene-act-overhead-bridge
(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

இருட்டாக இருப்பதால் யாரும் பார்க்க மாட்டார்கள் என நம்பி சுயஇன்பத்தில் ஈடுபட்ட 36 வயதுமிக்க வெளிநாட்டு ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செராங்கூனில் உள்ள ஜாலான் செர்மாட்டில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் அவர் சுயஇன்பம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சண்டையில் ஈடுபட்ட நான்கு ஆடவர்கள் கைது – காணொளி

யாரும் இல்லை என நம்பி அந்த செயலில் ஆடவர் ஈடுபட, அவ்வழியே சென்ற பெண் ஒருவர் அதனை கண்டு போலீசை அழைத்தார்.

இதனை அடுத்து அந்த பெண்ணை கண்டதும் ஆடவர் அங்கிருந்து ஓடியதாகவும் கூறப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டை சேர்ந்த Hoang Viet Thanh என்ற அவர் பொது இடத்தில் ஆபாசமான செயலைச் செய்த குற்றத்தை நேற்று (ஆகஸ்ட் 24) ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு S$2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, மற்றொரு பாலத்தின் கீழ் சுயஇன்பம் செய்ததாகவும் இவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

டோட்டோ டிரா: $2,932,433 ஜாக்பாட் முதல் பரிசு தட்டி சென்ற ஒரே நபர்!