இறந்த நிலையில் கிடந்த ஆடவர் உடல்… “ஒரு வாரம் வரவில்லை”- ஊழியர்கள் தேடியதை அடுத்து கண்டெடுப்பு

Man, 64, found dead in Toa Payoh flat after not collecting free meals for 1 week
Google / Shin Min Daily News

தோ பாயா பிளாட்டில் 64 வயதான ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒன்பதாவது மாடியில் வசிக்கும் அவர், ஒரு வாரம் ஆகியும் இலவச உணவை வாங்க வரவில்லை என்பதை அதே பிளாக்கில் உள்ள வயதானோர் உதவி நிலையத்தின் ஊழியர்கள் கவனித்தனர்.

பிரதமர் லீக்கு மீண்டும் கோவிட் தொற்று உறுதி

அது மட்டுமல்லாமல், அவரின் உடலை கண்டறிவதற்கு முன்னர் அங்கு அழுகிய துர்நாற்றம் வீசியதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், முதலில் அதை பூனை மலத்தின் துர்நாற்றம் என்று நினைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த மே 30 அன்று காலை 8:41 மணிக்கு, பிளாக் 5 லோரோங் 7 தோ பாயோவில் உள்ள வீட்டில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்தாதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

பின்னர் அவரின் வீட்டை சோதித்ததில் ஆடவர் உடல் அசைவற்று கிடந்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மரணத்தில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள் 

சிங்கப்பூரில் S$18,888 அதிஷ்ட பரிசுத் தொகையை தட்டிச்சென்ற தமிழக ஊழியர்!