சிங்கப்பூரில் 52 வயது பெண் பாலியல் பலாத்காரம்: சந்தேகத்தில் 28 வயது ஆடவர் கைது.!

சிங்கப்பூர் தோ பாயோவில் உள்ள ஒரு கட்டிடத்தில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) இரவு 9:30 மணியளவில், 52 வயது பெண் ஒருவரைப் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் 28 வயது ஆடவரை கைது செயதனர்.

அந்த பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது என்றும், ஆடவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாராலிம்பிக் போட்டி: டோக்கியாவிற்கு புறப்பட்ட சிங்கப்பூர் வீரர்கள்.!

ஆடவர், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், அவர் சென்ற வழியை பின்தொடர்ந்தது கண்காணிப்புக் கேமராக்களின் உதவியோடு காவல்துறையினர் சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.

பாலியல் துன்புறுத்தல் செய்ததாக காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை அங் மோ கியோ வட்டாரத்தில் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அந்த 28 வயது ஆடவர் இன்று (ஆகஸ்ட் 21) பாலியல் பலாத்காரக் குற்றம் சுமத்தப்பட உள்ளது. ஆடவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு 8 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 12 பிரம்படியும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் 45 பேரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை