உணவகத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர்… 3 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் – காத்திருக்கும் பிரம்படி

jail-molest-maid-lift man jailed

சிங்கப்பூரில் 31 வயதுடைய ஆடவர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டது தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு 8.55 மணியளவில் செம்பவாங் சாலையில் உள்ள உணவகத்தில், பெண் ஒருவர் அடையாளம் தெரியாத ஆடவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத வெளிநாட்டு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கம் ? – எத்தனை பேர் ?

அதன் பின்னர் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள், அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து, சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.

இதுபோன்ற குற்றத்திற்கு இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும்.

சமூகத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

“அவர்கள் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.”

Work pass ஊழியர்கள் அல்லது குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க யோசிக்கும் நிறுவனங்கள்!