சிங்கப்பூரின் பொங்கோல் (Punggol) வட்டாரத்திலுள்ள Sumang Walk பகுதியில், ஆடவர் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்த சந்தேகத்தின் பெயரில், 43 வயதுமிக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sumang Walk பகுதியிலுள்ள வீடு ஒன்றில், நேற்று (14-07-2021) பிற்பகல் 3 மணியளவில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உலகின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தி கட்டமைப்பு – சிங்கப்பூரில் திறப்பு
இதனையடுத்து, காவல்துறையினர் கத்திக்குத்து நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது, வீட்டிற்கு வெளியே ஆடவர் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் தரையில் அசைவின்றி விழுந்து கிடந்துள்ளார்.
கத்திக்குத்தால் காயம் அடைந்த அந்த 46 வயது ஆடவர், சம்பவ இடத்திலேயே இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்துபோன நபருக்கும் கைது செய்யப்பட சந்தேக நபருக்கும் முன்னரே அறிமுகம் உள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் மீது நாளை (ஜூலை 16) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளது. கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான எல்லை நடவடிக்கைகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்