சாலையில் பெண்னை மானபங்கம் செய்த ஆடவர்… போட்டோ எடுத்துக்கொடுத்த பெண் – தட்டி தூக்கிய போலீஸ்

man-arrested-after-woman--molested
Crowd View

நார்த் பிரிட்ஜ் சாலையில் பெண்ணை மானபங்கம் செய்ததாக 41 வயதுடைய ஆடவர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 25 அன்று, மானபங்கம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆடவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tampines மாலில் லிப்ட்காக ஏற்பட்ட சண்டை… ஒருவர் மீது தாக்குதல் – போலீசாருக்கு சென்ற புகார்

அன்று மாலை 5.25 மணியளவில் நார்த் பிரிட்ஜ் சாலையில் சாலையைக் கடக்கும் போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறைக்கு புகார் கிடைத்தது.

இதனை அடுத்து பெண், அந்த ஆடவரை புகைப்படம் எடுத்து போலீசிடம் ஒப்படைத்தார், இந்த புகைப்படம் போலீசுக்கு பயனுள்ளதாக இருந்தது.

போலீசார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் படங்களின் உதவியுடன் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டுபிடித்து, புகார் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர்.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் இவரை காணவில்லை… வாசகர்கள் உதவி செய்யுங்கள்