சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காணொளியில் வாக்குமூலம் அளித்த ஆடவர் கைது

மோட்டார் சைக்கிளை திருடி
File Photo : Singapore Police arrested

டவுனர் சாலையில் உள்ள குடியிருப்பு வீட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 18 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 22 அன்று, சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளியில், ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் ஒப்புக்கொண்டதை அடுத்து, காவல்துறைக்கு பல புகார்கள் கிடைத்தன.

அதிக விமானக் கட்டணங்களால் தமிழர்கள் அவதி: “சிங்கப்பூர் to தமிழ்நாடு நேரடி விமானம் வேண்டும்”

இதனை அடுத்து, உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறை அந்த நபரை கடந்த நவ.23ஆம் தேதி கைது செய்தது.

இவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக அந்த நபர் மீது நேற்று நவம்பர் 25 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுப்பு காவலில் வைக்கப்படவுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு