ஆர்ச்சர்ட் சாலையில் புகைபிடிக்கும்போது பிடிப்பட்டதாக கூறப்படும் ஆடவர் ஒருவர், அமலாக்க அதிகாரியிடம் “உங்கள் பேட்ஜைப் (அடையாள வில்லை) பார்க்க விரும்புகிறேன்” என்று கேட்பது காணொளியில் பதிவாகியுள்ளது.
Orchard Boulevard பொது கார் நிறுத்தத்தில் நடந்த இந்த சம்பவத்தின் காணொளி நேற்று (ஆக. 21) பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரில் 52 வயது பெண் பாலியல் பலாத்காரம்: சந்தேகத்தில் 28 வயது ஆடவர் கைது.!
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்ட இடத்தில் அவர் புகை பிடித்தது தெரியவந்துள்ளது.
இரண்டு செர்டிஸ் சிஸ்கோ அமலாக்க அதிகாரிகளிடம், பெயரை கூறவேண்டும் என்றும் காணொளி தொடங்குகிறது.
ஐயா, முதலில் என் வேலையை செய்ய விடுங்கள், பிறகு நான் உங்களுக்கு விளக்குகிறேன் என்று பதிலுக்கு அதிகாரி கூறினார்.
மேலும் காணொளி எடுப்பவர், அதிகாரிகளிடம் தங்கள் அடையாள அட்டைகளை கேமராவில் காட்டுமாறும் கேட்டது காணொளி வாயிலாக தெரிகிறது.
காணொளி எடுக்க உங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதிகாரி கூறினார், ஆனால் அவர் அதை காதில் வாங்கவில்லை.
பிறகு அதிகாரியிடம் “உங்கள் பேட்ஜைப் (அடையாள வில்லை) பார்க்க விரும்புகிறேன்” என்றும் அடம்பிடித்துள்ளார்.
காணொளி முடிவதற்கு முன்பு, அதிகாரி கோபம் அடைவதையும் காணமுடிகிறது.
இது போன்று பொது ஊழியர்களை தங்கள் பணியை செய்யவிடாமல் தடுப்பது சிங்கப்பூரில் சட்டப்படி குற்றமாகும்.